கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கோவை சாலை செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை தெற்கு மாவட்ட பாஜக நெசவாளர் பிரிவு சார்பில் தேசிய கைத்தறி தின விழாவும், மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கோவை சாலை செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை தெற்கு மாவட்ட பாஜக நெசவாளர் பிரிவு சார்பில் தேசிய கைத்தறி தின விழாவும், மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

மாவட்ட நெசவாளர் பிரிவுத் தலைவர் அருள் சந்திரசேகர் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில், தெற்கு மாவட்ட நெசவாளர் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேசிய நெசவாளர் தினத்தை முன்னிட்டு நெசவாளர்களுக்குப் பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் சலுகைகள் கிடைக்கத் தனி கூட்டுறவுச் சங்கம் ஏற்படுத்த வேண்டும்.
நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் புடவை மற்றும் பட்டாடை ரகங்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்.
நூல் விலை ஏற்றம் இறக்கம் இல்லாத சீரான விலை நிர்ணயம் செய்து ஜவுளித் தொழிலை ஒழுங்குபடுத்த ஆணையம் அமைக்க வேண்டும்.
மூத்த கைத்தறி நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் நாராயணன், மாவட்ட பாஜக தலைவர் வசந்த ராஜன், பொன்இளங்கோ, கணேசமூர்த்தி, மண்டலத் தலைவர் கிருஷ்ணசாமி, மண்டல நெசவாளர் பிரிவு தலைவர் அருண்குமார் உள்ளிட்ட நெசவாளர்கள், மாவட்ட, மண்டல, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட நெசவாளர் பிரிவுத் தலைவர் அருள் சந்திரசேகர் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில், தெற்கு மாவட்ட நெசவாளர் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேசிய நெசவாளர் தினத்தை முன்னிட்டு நெசவாளர்களுக்குப் பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் சலுகைகள் கிடைக்கத் தனி கூட்டுறவுச் சங்கம் ஏற்படுத்த வேண்டும்.
நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் புடவை மற்றும் பட்டாடை ரகங்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்.
நூல் விலை ஏற்றம் இறக்கம் இல்லாத சீரான விலை நிர்ணயம் செய்து ஜவுளித் தொழிலை ஒழுங்குபடுத்த ஆணையம் அமைக்க வேண்டும்.
மூத்த கைத்தறி நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் நாராயணன், மாவட்ட பாஜக தலைவர் வசந்த ராஜன், பொன்இளங்கோ, கணேசமூர்த்தி, மண்டலத் தலைவர் கிருஷ்ணசாமி, மண்டல நெசவாளர் பிரிவு தலைவர் அருண்குமார் உள்ளிட்ட நெசவாளர்கள், மாவட்ட, மண்டல, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.