கோவையில் கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த வாலிபருக்கு கத்திக்குத்து..!

கோவை: கோவையில் கடந்த ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் வெளிவந்த வாலிபரை மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். தலைமறைவான அந்த மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கடந்த ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் வெளிவந்த வாலிபரை மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். தலைமறைவான அந்த மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை காட்டூர் ராம் நகரில் கடந்த ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் அவரது ஜூஸ் கடை முன்பு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில், ரத்தினபுரி சங்கனூர், காந்தி நகரைச் சேர்ந்த அருண்குமார் வயது 32, உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது, அருண்குமார் ஜாமினில் வெளி வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று அவர் கோவை பாப்பநாயக்கன் பாளையம் ஜெயசிம்மாபுரத்தில் உள்ள தனது நண்பர் சிவகுமார் என்பவரை சந்திப்பதற்காகச் சென்றார்.

அப்போது இருவரும் அவர்கள் வீட்டருகே நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் அங்கு வந்த மூன்று பேர் அருண்குமாரிடம் தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனது.

இதில், ஆத்திரம் அடைந்த மூன்று பேரும் சேர்ந்து அருண்குமாரை கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

இதைப் பார்த்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கோவையைச் சேர்ந்த மோசஸ் உட்பட மூன்று பேர் அவரை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. தொடர்ந்து, தலைமறைவான அந்த மூன்று பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...