கோவை: தொழில்துறை அமைச்சர்கள் நாளை கோவைக்கு வருகைதந்து தொழில் துறையினருடன் கலந்துரையாடல் நடத்துகின்றனர்.
கோவை: தொழில்துறை அமைச்சர்கள் நாளை கோவைக்கு வருகைதந்து தொழில் துறையினருடன் கலந்துரையாடல் நடத்துகின்றனர்.
அதோடு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் உள்ளிட்ட நலத் திட்டங்களின் கீழ் ஒப்பளிப்பாணை வழங்குகின்றனர்.
ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நாளை கோவையில் தொழில் துறையினருடன் கலந்துரையாட உள்ளனர். இந்நிகழ்ச்சி ஆவாரம்பாளையம் ‘கோ இந்தியா' அரங்கத்தில் நாளை மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை நடக்கிறது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், சுயதொழில் திட்டங்கள் மற்றும் முதலீட்டை மானிய திட்டங்களின் கீழ் ஒப்பளிப்பாணை வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரை ஆற்றுகிறார். அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையுரை மற்றும் இறுதி குறிப்புரை வழங்குகிறார். முன்னதாக இரு அமைச்சர்களும் கோவையில் உள்ள தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் துறையினருடன் கலந்துரையாட உள்ளனர்.