கிணத்துக்கடவு அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 320 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 320 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 320 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தமிழக - கேரள எல்லைப் பகுதியான வீரப்ப கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக தமிழகத்தில் விநியோகிக்கபடும் விலையில்லா ரேசன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து வாங்கி மூட்டைகளாக கட்டி இருசக்கர வாகனத்தில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவதாக கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

இந்த நிலையில், இன்று காலை வீரப்பகவுண்டனூரில் வட்ட வழங்கல் அலுவலர் முத்து மற்றும் ஊழியர்கள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக மூன்று மூட்டைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த நபர் இருசக்கர வாகனத்தையும், அரிசி மூட்டைகளையும் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.



பின்னர், மூன்று மூட்டைகளில் இருந்த 320 கிலோ ரேஷன் அரிசி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அலுவலர் முத்து, ரேசன் அரிசி கொண்டு வந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...