வால்பாறையில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை சிறப்பு முகாம்!!

கோவை: வால்பாறையில் கோவாக்சின் இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் கோவாக்சின் இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 6-ஆம் தேதி கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்பட்டது.

இந்நிலையில், இன்று 10.08.2021 செவ்வாய்க்கிழமை வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் ஆயிரத்து 200 நபர்களுக்கு கோவாக்சின் இரண்டாம் கட்டம் தடுப்பூசி போடப்பட்டது.

வால்பாறையில் உள்ள அனைத்து பகுதியில் உள்ள மக்கள் முதல் தடவை கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தவணை போடப்பட்டது.

இதில் காலை மதியம் என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு காலையில் 300-ஆண்களுக்கும் 300-பெண்களுக்கும் போடப்பட்டது.அதேபோல் மதியம் 300-ஆண்கள் 300-பெண்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது.

காலை முதலே அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு கூட்டம் இன்றி சமூக இடைவெளியுடன் தடுப்பூசி செலுத்திச் சென்றனர். இந்த முகாமில் வால்பாறை நகரம் மட்டுமின்றி தேயிலைத் தோட்ட பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...