சேரன் மாநகரில் தெரு விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி.!!

கோவை: சேரன் மாநகர் குடியிருப்பு பகுதி மெயின் ரோட்டில் தெருவிளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.


கோவை: சேரன் மாநகர் குடியிருப்பு பகுதி மெயின் ரோட்டில் தெருவிளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

விளாங்குறிச்சி ரோட்டில் சேரன் மாநகர் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏ, பி, சி என மூன்று பிரிவுகளில் 568-வீடுகள் உள்ளன.

இதுதவிர, சேரன் மாநகர் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. சேரன் மாநகர் குடியிருப்பு பகுதியில் மொத்தம் 7-பஸ் ஸ்டாப்கள் உள்ளன.



முதல் பஸ் ஸ்டாப் துவங்கி ஏழாவது பஸ் ஸ்டாப் வரை ரோட்டோரங்களில் அமைக்கப்பட்டுள்ள எல்.இடி தெருவிளக்குகள் அடிக்கடி எரிவதில்லை. இதனால் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



குறிப்பாகப் பாதசாரிகள் மிகவும் அச்சத்துடன் சாலையோரத்தில் நடந்து செல்லவேண்டிய நிலை காணப்படுகிறது. தெருவிளக்குகள் எரியாத காரணத்தால் வாகன விபத்துகள் நடப்பதும் வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது.



மாநகராட்சி அதிகாரிகள் இப்பிரச்சினை குறித்து ஆய்வு மேற்கொண்டு அனைத்து தெரு விளக்குகளும் சரியான முறையில் தடையின்றி இரவு நேரங்களில் எரிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே சேரன் மாநகர் குடியிருப்பு வாசிகளின் எதிர்பார்ப்பாகும்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...