கோவை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து வந்த பயணியிடம் 883.06 கிராம் தங்கம் பறிமுதல்..!

கோவை: கோவை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து வந்த பயணியிடம் 883.06 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 42.82 லட்சம் மதிப்புள்ள அந்த தங்கத்தை பறிமுதல் செய்து சுங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து வந்த பயணியிடம் 883.06 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 42.82 லட்சம் மதிப்புள்ள அந்த தங்கத்தை பறிமுதல் செய்து சுங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் பாலைவன நாடுகள் என சொல்லக்கூடிய சார்ஜா, கத்தார், துபாய், மஸ்கட் போன்ற நாடுகளில் இருந்து தொடர்ந்து தங்கக் கட்டிகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் பல்வேறு விதமான வடிவங்களில் மறைத்து எடுத்து வரப்படுவது வழக்கமாக உள்ளது.

அதை சுங்க அதிகாரிகள் சோதனையின் போது அவர்களை பிடித்து நகைகளையும், தங்கத்தையும் மீட்டு வருகின்றனர்.

இதேபோல, இன்று அதிகாலை 3.50 மணி அளவில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஜி. 9413 என்ற விமானம் கோவை விமான நிலையத்தை வந்தடைந்தது.

அப்பொழுது அதில் இருந்து பயணிகள் இறங்கி தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். டி.ஆர்.ஐ அதிகாரிகள், சுங்க துறையைச் சேர்ந்தவர்கள் பயணிகளை சோதனை செய்துகொண்டிருந்தனர்.

அப்பொழுது இராமசாமி சேகர், தருமா அருள் நேதாஜி என்கிற 2 பயணிகள் நடவடிக்கையில் மாற்றமாக காட்சி அளித்தனர்.

அதைத் தொடர்ந்து அவர்களை சுங்க அதிகாரிகள் சோதனை செய்த பொழுது அவர்களுடைய கீழ் ஆடைக்கு உள்ளே தங்கத்தை பேஸ்ட் போல் உருவாக்கி அதை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

உடனடியாக டி.ஆர்.ஐ. அதிகாரிகள் பேஸ்ட்டில் இருந்து தங்கத்தை பிரித்து அதனுடைய மதிப்பு என்ன என்பதை ஆராய்ந்தனர். 883.06 கிராம் ஒரிஜினல் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது.

அதன் இன்றைய மதிப்பு 42.82 லட்சமாகும். தொடர்ந்து சுங்க அதிகாரிகள் இரண்டு பேரையும் விசாரணை செய்து வருகின்றனர். இன்று அதிகாலை 42.82 - லட்சம் தங்கம் பேஸ்ட் வடிவில் கைப்பற்றியது கோவை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...