கோவை: கோவையில் ஆடிட்டர் வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஊருக்கு சென்றிருந்த போது இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.
கோவை: கோவையில் ஆடிட்டர் வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஊருக்கு சென்றிருந்த போது இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.
பீளமேடு சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்த தில்லை நடராஜன் என்பவரின் மகன் முத்தமிழ்செல்வன்(51). இவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு குடும்பத்தாருடன் சென்றார். மீண்டும் நேற்று காலை கோவைக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி விளக்குகள், வெள்ளி கிண்ணங்கள், குங்குமச்சிமிழ், வெள்ளி தட்டுகள், வெள்ளி நாணயங்கள், தங்க கம்மல்கள், தங்க நகை உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் பீளமேடு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீளமேடு சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்த தில்லை நடராஜன் என்பவரின் மகன் முத்தமிழ்செல்வன்(51). இவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு குடும்பத்தாருடன் சென்றார். மீண்டும் நேற்று காலை கோவைக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி விளக்குகள், வெள்ளி கிண்ணங்கள், குங்குமச்சிமிழ், வெள்ளி தட்டுகள், வெள்ளி நாணயங்கள், தங்க கம்மல்கள், தங்க நகை உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் பீளமேடு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.