கோவை சூலூர் பகுதியில் 2 தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது..!

கோவை: கோவை சூலூர் தாலுகா பகுதியில் 2 கிராமங்களை குறிவைத்து தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை சூலூர் தாலுகா பகுதியில் 2 கிராமங்களை குறிவைத்து தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள காடாம்பாடி, காங்கேயம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

இந்த சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி வழிகாட்டுதலின் பேரில், கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், தனிப்படையினர் அப்பநாயக்கன்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.



விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ரிவால்வர் முருகன், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் என்பதும், சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும், அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஊரடங்கின்போது, டாஸ்மாக் கடையில் துளையிட்டு பணம் மற்றும் மதுபான பாட்டில்கள் திருடிய வழக்கில் முருகன் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 18 பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...