கோவை: கோவையில் உள்ள ஒரு லாட்ஜில் உடலில் காயங்களுடன் பெண் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது கள்ளக்காதலன் கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் உள்ள ஒரு லாட்ஜில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நிலையில், அவரது கள்ளக்காதலன் கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா (58), இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி பிந்து (46), என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
கடந்த சில நாட்களுக்கு முன் இவர்கள் காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் கணவர், மனைவி எனக் கூறி அறை எடுத்து தங்கினர்.
இந்நிலையில், நேற்று லாட்ஜில் இவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறைக்கதவை தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை.
இதனையடுத்து, சந்தேகம் அடைந்த ஊழியர்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிந்து உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இவரின் அருகே முஸ்தபா கை கால் கழுத்து பகுதியில் கத்தியால் அறுத்து காயம் மற்றும் பாட்டிலால் குத்திய காயங்களுடன் ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி கிடந்தார்.
பின்னர், துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், காட்டூர் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். முஸ்தபா சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிந்து 3 நாட்களுக்கு முன் இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இவர்கள் தங்கியிருந்த அறையில் எலி மருந்து பேஸ்ட் இருந்தது. பின்பு எலிமருந்து தின்று தற்கொலை செய்திருக்கலாம். இல்லாவிட்டால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உடல் அழுகி விட்டதால், உடலில் காயங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை. பிந்துவை கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம்? அதன்பின் முஸ்தபா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்? என போலீசார் கருதுகின்றனர்.
முஸ்தபா பிந்துவை கொலை செய்தாரா? அல்லது வேறு யாராவது இவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தார்களா? அவர்கள் பிந்துவை கொலை செய்து இருக்கலாம்? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிந்துவின் சடலம் பிரேத பரிசோதனை செய்த பிறகே அவரது இறப்பிற்கான காரணம் தெரியும் என போலீசார் தெரிவிக்கின்றனர். இருவரையும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து போலீசார் வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா (58), இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி பிந்து (46), என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
கடந்த சில நாட்களுக்கு முன் இவர்கள் காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் கணவர், மனைவி எனக் கூறி அறை எடுத்து தங்கினர்.
இந்நிலையில், நேற்று லாட்ஜில் இவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறைக்கதவை தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை.
இதனையடுத்து, சந்தேகம் அடைந்த ஊழியர்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிந்து உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இவரின் அருகே முஸ்தபா கை கால் கழுத்து பகுதியில் கத்தியால் அறுத்து காயம் மற்றும் பாட்டிலால் குத்திய காயங்களுடன் ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி கிடந்தார்.
பின்னர், துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், காட்டூர் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். முஸ்தபா சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிந்து 3 நாட்களுக்கு முன் இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இவர்கள் தங்கியிருந்த அறையில் எலி மருந்து பேஸ்ட் இருந்தது. பின்பு எலிமருந்து தின்று தற்கொலை செய்திருக்கலாம். இல்லாவிட்டால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உடல் அழுகி விட்டதால், உடலில் காயங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை. பிந்துவை கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம்? அதன்பின் முஸ்தபா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்? என போலீசார் கருதுகின்றனர்.
முஸ்தபா பிந்துவை கொலை செய்தாரா? அல்லது வேறு யாராவது இவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தார்களா? அவர்கள் பிந்துவை கொலை செய்து இருக்கலாம்? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிந்துவின் சடலம் பிரேத பரிசோதனை செய்த பிறகே அவரது இறப்பிற்கான காரணம் தெரியும் என போலீசார் தெரிவிக்கின்றனர். இருவரையும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து போலீசார் வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.