கோவை: ஊட்டியில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் கையில் சிக்கி உடைந்த ஊசியை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றினர்.
கோவை: ஊட்டியில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் கையில் சிக்கி உடைந்த ஊசியை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
ஊட்டி ராஜ்பவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பகதூர், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சஞ்சனா 28. இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
இவர் 2-வது பிரசவத்திற்காக கடந்த 4ம் தேதி ஊட்டியில் உள்ள சேட் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சஞ்சனாவை அனுமதித்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் குழந்தை பிறந்த நிலையில், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக சஞ்சனாவின் கையில் குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. இதனை கழற்ற முயன்ற போது ஊசி மட்டும் உடைந்து கையின் நரம்புக்குள் சென்றது.
இதனை ஊட்டியில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து எடுக்க முடியாத நிலையில், கோவை கொண்டு செல்ல வேண்டும் என உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சஞ்சனா கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதனை செய்த வாஸ்குலர் சர்ஜன் டாக்டர் தீபன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சஞ்சனாவின் கையில் சிக்கியிருந்த ஊசியை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
தற்போது, சஞ்சனா நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் நிர்மலா தெரிவித்தார்.
ஊட்டி ராஜ்பவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பகதூர், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சஞ்சனா 28. இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
இவர் 2-வது பிரசவத்திற்காக கடந்த 4ம் தேதி ஊட்டியில் உள்ள சேட் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சஞ்சனாவை அனுமதித்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் குழந்தை பிறந்த நிலையில், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக சஞ்சனாவின் கையில் குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. இதனை கழற்ற முயன்ற போது ஊசி மட்டும் உடைந்து கையின் நரம்புக்குள் சென்றது.
இதனை ஊட்டியில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து எடுக்க முடியாத நிலையில், கோவை கொண்டு செல்ல வேண்டும் என உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சஞ்சனா கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதனை செய்த வாஸ்குலர் சர்ஜன் டாக்டர் தீபன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சஞ்சனாவின் கையில் சிக்கியிருந்த ஊசியை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
தற்போது, சஞ்சனா நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் நிர்மலா தெரிவித்தார்.