கிணத்துக்கடவில் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் திமுகவினர் அஞ்சலி..!

கோவை: திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று, கிணத்துக்கடவில் கலைஞரின் உருவப்படத்திற்கு பூமாலை சூடி திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று, கிணத்துக்கடவில் கலைஞரின் உருவப்படத்திற்கு பூமாலை சூடி திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

அதன்படி இன்று, கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் ஆர்.எஸ்.ரோடு பகுதியில் திமுக சார்பில் கலைஞர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.



கிணத்துக்கடவு பேரூராட்சி முன்னாள் தலைவரும், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினருமான கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற நினைவுநாளில் அலங்கரிக்கப்பட்ட கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு அஞ்சலியும் செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆறுச்சாமி, தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழ்ப்பித்தன், கணேஷ், லட்சுமணன், மணிகண்டன், பாலாஜி, ஈஸ்வரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...