கிணத்துக்கடவு அருகே காவல் துறையினர் சார்பில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம்..!

கோவை: கிணத்துக்கடவு அருகே எஸ்.மேட்டுப்பாளையத்தில் காவல் துறையினர் சார்பில் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


கோவை: கிணத்துக்கடவு அருகே எஸ்.மேட்டுப்பாளையத்தில் காவல் துறையினர் சார்பில் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் கிணத்துக்கடவு காவல் துறையினர் சார்பில் கிராமங்கள் தோறும் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தபட்டு வருகிறது.

அதன்படி, இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுபாளையம் ஊராட்சியில் காவல் துறையினர் சார்பில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



கிணத்துக்கடவு காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி, தலைமை காவலர் சுரேஷ், பெண் காவலர் பவதாரணி ஆகியோர் கலந்து கொண்டு கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



கொரோனா பெருந்தொற்று மீண்டும் பரவத் தொடங்குவதால், தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், கிராமங்களில் சந்தேகத்திற்கிடமாக யாரேனும் குடியிருந்தாலும், நடமாட்டம் இருந்தாலும் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.



மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெற்றோர்கள் பெண் குழந்தைகளைக் கண்காணித்து வளர்க்க வேண்டும் என்றும், பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தும் போது ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாதவர்கள் தொடர்பு கொண்டால், நிராகரிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு கூட்டத்தில் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.



இந்தக் கூட்டத்தில் எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...