கோவை கிணத்துக்கடவு அருகே மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு வெண்கலசிலை அமைத்து 3ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு வெண்கலசிலை அமைத்து 3ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு வெண்கலசிலை அமைத்து 3ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு மார்பளவில் வெண்கலசிலை அமைக்க நல்லட்டிபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் கார்த்திகா குமரேசன் மற்றும் திமுக கிளை செயலாளர் குமரேசன் திட்டமிட்டனர்.



இந்த நிலையில், ஏற்கனவே 20 கிலோ எடை கொண்ட வெண்கலத்தினால் ஆன கலைஞர் கருணாநிதி சிலை வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தார்.



தற்போது கருணாநிதி சிலை வைப்பதற்கான அனுமதி இன்னும் கிடைக்காததால் இன்று ஊராட்சி மன்ற தலைவர் தாமரைக்குளத்தில் அவரது வீட்டில் முன்னாள் முதலமைச்சரின் வெண்கலத்தினால் ஆன கருணாநிதி சிலைக்கு ஊராட்சிமன்ற தலைவர் கார்த்திகா குமரேசன் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கருப்புசாமி, செந்தில், ரமேஷ், லட்சுமணன் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...