கோவையில் சிறுசிறு பேருந்து நிலையங்களில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம்... மாநகராட்சி ஏற்பாடு..!

கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகின்ற நிலையில், மூன்றாவது அலை தாக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.


கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகின்ற நிலையில், மூன்றாவது அலை தாக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை, இணைந்து பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரசாரங்கள் வீடு வீடாக சென்று சளி காய்ச்சல் பரிசோதனை செய்வது, தெருக்களில் சென்று மருந்து தெளிப்பது, துண்டு பிரசுரங்கள் வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது. ஆக்சிஜன் அளவை மக்களிடம் கணக்கிடுவது என பல்வேறு விதமான சுகாதார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் ஒரு பகுதியாக கோவையில் உள்ள சிறு சிறு பேருந்து நிலையங்களில் டென்ட் அமைத்து கபசுரக் குடிநீர் வழங்கி, ஆக்ஸிஜன் அளவு பார்க்கப்பட்டு, அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கணபதி 3-ஆம் நம்பர் பேருந்து நிலையம் வாசலில் சாமியான பந்தல் அமைத்து மாநகராட்சி பணியாளர்கள் காலை முதல் மாலை வரை கபசுரக் குடிநீர், பொது மக்களுக்கு வழங்கினர். மக்களுக்கு சத்து மாத்திரைகள் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் வழங்கினர். சளி மற்றும் காய்ச்சலின் அளவு பார்க்கப்பட்டது. இதுபோன்ற செயலால் வெளியூர்களுக்கு செல்லக் கூடிய ஊர்களுக்கு செல்லக் கூடிய மக்களுக்கு இது பெரும் உதவியாக இருந்ததாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...