செல்போனை திருடி, கோவை கலெக்டர் சமீரனுக்கு மிரட்டல்... சேலம் பேப்பர் கடைகாரரிடம் போலீஸார் விசாரணை..!

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு சேலத்தில் இருந்து செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு சேலத்தில் இருந்து செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், சேலம் பேப்பர் கடைக்காரரிடம் விசாரணை செய்து வருகின்றனர். சேலத்தில் இருந்து கோவை கலெக்டர் செல்போனில் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்ட கலெக்டராக இருப்பவர் சமீரன். நேற்று இவரது செல்போனுக்கு பேசிய ஆசாமி அவருக்கு கடும் வார்த்தைகளால் மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மிரட்டல் விடுத்த ஆசாமி எந்த ஊர் என நடத்திய விசாரணையில், சேலத்திலிருந்து பேசி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சேலம் சைபர் கிரைம் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு களத்தில் இறங்கினர்.

மிரட்டல் விடுத்த செல்போனுக்கு சொந்தக்காரர் இரும்பாலை பக்கமுள்ள சிற்றனூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அவர் பழைய பேப்பர் வாங்கும் கடை வைத்துள்ளார். அவரைப் பிடித்து விசாரித்ததில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையில் வைத்திருந்த செல்போனை யாரோ திருடிச் சென்று விட்டனர் என கூறினார்.

கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த ஆசாமி சிற்றூரில் இருந்து குரங்குசாவடி வரை வந்துள்ளான். அவன் 20 பேருக்கு செல்போனில் பேசியிருப்பது தெரியவந்தது. அதன்பிறகு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளான். கிருஷ்ணனின் செல்போனை திருடியது யார்? அப்படியே யாராவது எடுத்துச் சென்றால்கூட கோவை கலெக்டரின் செல் நம்பர் எண்ணை கண்டுபிடித்து மிரட்டல் விடுக்கக் காரணம் என்ன? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கோவை போலீஸார் மற்றும் சேலம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கலெக்டர் அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுக்கும் போது சலசலப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த மிரட்டல் இருக்குமா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...