வால்பாறையில் திமுகவினர் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு..!

கோவை: வால்பாறையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை திமுகவினர் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அனுசரித்தனர்.


கோவை: வால்பாறையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை திமுகவினர் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அனுசரித்தனர்.

திமுகழக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி மறைந்தார். அவர் மறைந்து மூன்று ஆண்டுகள் கடந்த நினைவு நாளை அனுசரிக்கும் வண்ணம் கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை முன்பு கலைஞரின் உருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து பூத்தூவி அனுசரித்தனர்.

இதில், கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு பூத்தூவி வணங்கினார்.



வால்பாறை பொறுப்பாளர் பால்பாண்டி, முன்னாள் நகர மன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன், ஜே.பி.ஆர்., செந்தில், மகுடீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, கடை குட்டி மற்றும் பொள்ளாச்சி பகுதி ஒன்றிய செயலாளர்கள் ஒட்டப்பட்டி கிரி, துரை, அய்யம்பாளையம் ராஜ், திம்பம்குத்து சக்திவேல், ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் சேனாதிபதி, தனபால் கிருஷ்ணன், காமராஜ், கண்ணன் மற்றும் கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...