திருப்பூரில் தமிழக செய்தித்துறை அமைச்சர் தலைமையில் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்!

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் நடைபெற்றது.



இந்த கூட்டத்திற்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு‌.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் சிவசேனாதிபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை அவரவர் வீடுகளில் எளிய முறையில் அனுசரிக்க வேண்டும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தினார்.

மேலும் அவர் பேசுகையில், திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற உடன் கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற சவாலை சந்தித்து வருவதாகவும் தலைவர் சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பரவலை கையாண்டு கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.



அதேசமயம், பொதுமக்களில் சிலர் அலட்சியம் காட்டி வருவதாகவும், அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்காமல் ஏதோ அரசு சொல்கிறது என்று அஜாக்கிரதையாக இந்த நோயை கையாலும் சூழல் நிலவி வருகிறது. இதனால் சில பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு குறைய வில்லை என்றார்.

எனவே, ஒவ்வொருவரும் அதற்கான முயற்சி எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம், தொற்று நோயை முழுமையாக ஒழிக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என திமுகவினருக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...