கோவை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவையில் காவல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவையில் காவல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
குடியரசுத்தலைவர் நீலகிரி மாவட்டம் வந்ததைத் தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்ய வந்தார். தொடர்ந்து இன்று அவர் கோவை வந்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்துக் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு அவர் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகிறார்.

இதில் மேற்கு மண்டல ஐஜி., டி.ஐ.ஜி., கோவை, திருச்சி, சேலம் மாநகர காவல் ஆணையர்கள், மற்றும் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழக டிஜிபி.,யாக பொறுப்பேற்ற பின் சைலேந்திரபாபு முதல் முறையாகக் கோவை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத்தலைவர் நீலகிரி மாவட்டம் வந்ததைத் தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்ய வந்தார். தொடர்ந்து இன்று அவர் கோவை வந்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்துக் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு அவர் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகிறார்.
இதில் மேற்கு மண்டல ஐஜி., டி.ஐ.ஜி., கோவை, திருச்சி, சேலம் மாநகர காவல் ஆணையர்கள், மற்றும் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழக டிஜிபி.,யாக பொறுப்பேற்ற பின் சைலேந்திரபாபு முதல் முறையாகக் கோவை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.