கோவை: கோவை அருகே செட்டிபாளையத்தில் 60 அடி கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
கோவை: கோவை அருகே செட்டிபாளையத்தில் 60 அடி கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
கோவை அருகே உள்ள செட்டிபாளையம், சின்னையன் செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் பத்திரகாளிமுத்து (38). இவர் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள கிணற்று சுவர் மீது ஏறி உட்கார்ந்துள்ளார்.
அப்போது, திடீரென நிலைதடுமாறி பத்தரகாளிமுத்து 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளார். இதனை கண்ட வீட்டில் இருந்த குடும்பத்தினர், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பத்திரகாளிமுத்துவை கயிறு மூலம் மீட்க முயன்றனர்.
ஆனால், மீட்க முடியாததால் தண்ணீரில் மூழ்காமல் இருக்க கயிற்றை பிடித்துக் கொண்டு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கிணத்துகடவு தீயணைப்பு நிலைய அதிகாரி காளிமுத்து தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் செட்டிபாளையம் சென்று கிணற்றில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பத்திரகாளி முத்துவை கயிறு கட்டி லாவகமாக கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
கிணற்றில் தவறி விழுந்த பத்ரகாளி முத்துக்கு கை, காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பத்திரகாளி முத்துவை தீயணைப்புத் துறையினர் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவ சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தண்ணீரில் தத்தளித்த நபரை மீட்ட கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
கோவை அருகே உள்ள செட்டிபாளையம், சின்னையன் செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் பத்திரகாளிமுத்து (38). இவர் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள கிணற்று சுவர் மீது ஏறி உட்கார்ந்துள்ளார்.
அப்போது, திடீரென நிலைதடுமாறி பத்தரகாளிமுத்து 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளார். இதனை கண்ட வீட்டில் இருந்த குடும்பத்தினர், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பத்திரகாளிமுத்துவை கயிறு மூலம் மீட்க முயன்றனர்.
ஆனால், மீட்க முடியாததால் தண்ணீரில் மூழ்காமல் இருக்க கயிற்றை பிடித்துக் கொண்டு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கிணத்துகடவு தீயணைப்பு நிலைய அதிகாரி காளிமுத்து தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் செட்டிபாளையம் சென்று கிணற்றில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பத்திரகாளி முத்துவை கயிறு கட்டி லாவகமாக கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
கிணற்றில் தவறி விழுந்த பத்ரகாளி முத்துக்கு கை, காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பத்திரகாளி முத்துவை தீயணைப்புத் துறையினர் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவ சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தண்ணீரில் தத்தளித்த நபரை மீட்ட கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.