கோவை: பொள்ளாச்சி - உடுமலை ரோடு சின்னாம்பாளையம் பகுதியில் நேற்று இரவு அடுத்தடுத்து மூன்று கடைகளின் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பொள்ளாச்சி - உடுமலை ரோடு சின்னாம்பாளையம் பகுதியில் நேற்று இரவு அடுத்தடுத்து மூன்று கடைகளின் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியில் உடுமலை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வணிக வளாகத்தில், 10க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வியாபாரிகள் நேற்று இரவு வழக்கம்போல கடைகளை அடைத்து விட்டு, சென்று விட்டனர். இன்று காலை கடையை திறக்க வரும்போது. அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், வைசாகர் என்பவரின் கூலிங் சீட் விற்பணை கடையில் இருந்து ரூ.5 ஆயிரம், யாசின் என்பவரின் சூப் விற்பணை கடையில் இருந்து ரூ.12 ஆயிரம், குமார் என்பவரின் மளிகை கடையில் இருந்து ரூ.2000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரை, மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த திருட்டுச் சம்பவத்தால் மக்களும், வியாபாரிகளும் அச்சமடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியில் உடுமலை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வணிக வளாகத்தில், 10க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வியாபாரிகள் நேற்று இரவு வழக்கம்போல கடைகளை அடைத்து விட்டு, சென்று விட்டனர். இன்று காலை கடையை திறக்க வரும்போது. அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், வைசாகர் என்பவரின் கூலிங் சீட் விற்பணை கடையில் இருந்து ரூ.5 ஆயிரம், யாசின் என்பவரின் சூப் விற்பணை கடையில் இருந்து ரூ.12 ஆயிரம், குமார் என்பவரின் மளிகை கடையில் இருந்து ரூ.2000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரை, மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த திருட்டுச் சம்பவத்தால் மக்களும், வியாபாரிகளும் அச்சமடைந்துள்ளனர்.