கோவை: உதகையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவர் சாலை மார்க்கமாக கோவை வந்து டெல்லி செல்வதால், பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோவை: உதகையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவர் சாலை மார்க்கமாக கோவை வந்து டெல்லி செல்வதால், பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு வாரம் தமிழக சுற்றுப் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சூலூர் வந்து விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலமாக டெல்லி செல்வதாக இருந்தது.
இந்நிலையில், ஊட்டியில் வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்ததால் தரைவழி மார்க்கமாக கார் மூலமாக கோவை நோக்கி குடியரசுத் தலைவர் வந்து கொண்டுள்ளார்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் கடந்த 2ம் தேதி சென்னை வந்தார். அன்று மாலை தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை சட்டசபையில் துவக்கி வைத்து உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து, அவர் சூலூர் விமானப்படைத் தளத்துக்கு வந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், வெலிங்டன் பயிற்சி மையத்திற்குச் சென்று தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்று காலை டெல்லி திரும்புவதாக இருந்தது.
இந்த நிலையில், ஊட்டி ராணுவ பயிற்சி மையமான வெலிங்டன் மைதானத்தில் ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருந்தது. வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்ததால் தரைவழி மார்க்கமாக அவர் கோவையை நோக்கி வந்து கொண்டு உள்ளார். அவர் சூலூரில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு வந்து அங்கிருந்து தனி விமானம் மூலமாக டெல்லி செல்ல உள்ளார்.

இந்த நிலையில், திடீரென அவர் சாலை மார்க்கமாக வருவதால், சூலூரில் இருந்து ஊட்டி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது:- அவருடைய கார் மிகவும் மெதுவாகத்தான் கோவை நோக்கி வந்து கொண்டுள்ளது. அவர் எத்தனை மணிக்கு சூலூரை அடைகிறாரோ அதன் பிறகு அவர் சூலூர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லக்கூடிய நேரம் நமக்கு தெரியவரும் என்று குறிப்பிட்டார்.
ஒரு வாரம் தமிழக சுற்றுப் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சூலூர் வந்து விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலமாக டெல்லி செல்வதாக இருந்தது.
இந்நிலையில், ஊட்டியில் வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்ததால் தரைவழி மார்க்கமாக கார் மூலமாக கோவை நோக்கி குடியரசுத் தலைவர் வந்து கொண்டுள்ளார்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் கடந்த 2ம் தேதி சென்னை வந்தார். அன்று மாலை தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை சட்டசபையில் துவக்கி வைத்து உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து, அவர் சூலூர் விமானப்படைத் தளத்துக்கு வந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், வெலிங்டன் பயிற்சி மையத்திற்குச் சென்று தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்று காலை டெல்லி திரும்புவதாக இருந்தது.
இந்த நிலையில், ஊட்டி ராணுவ பயிற்சி மையமான வெலிங்டன் மைதானத்தில் ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருந்தது. வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்ததால் தரைவழி மார்க்கமாக அவர் கோவையை நோக்கி வந்து கொண்டு உள்ளார். அவர் சூலூரில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு வந்து அங்கிருந்து தனி விமானம் மூலமாக டெல்லி செல்ல உள்ளார்.
இந்த நிலையில், திடீரென அவர் சாலை மார்க்கமாக வருவதால், சூலூரில் இருந்து ஊட்டி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது:- அவருடைய கார் மிகவும் மெதுவாகத்தான் கோவை நோக்கி வந்து கொண்டுள்ளது. அவர் எத்தனை மணிக்கு சூலூரை அடைகிறாரோ அதன் பிறகு அவர் சூலூர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லக்கூடிய நேரம் நமக்கு தெரியவரும் என்று குறிப்பிட்டார்.