கோவை: கொரோனா கட்டுப்பாடுகளால், பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை: கொரோனா கட்டுப்பாடுகளால், பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில், வாரம் இருமுறை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை செயல்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும், உள்ளூர் வியாபாரிகளும் சந்தைக்கு மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து அதிகப்படியாக கேரளாவுக்கு மாடுகள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மாடு வரத்து அதிகரிப்பால், விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் கோவை மாவட்டம் முழுவதும், கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி மாட்டு சந்தையை தற்காலிகமாக மூட கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதனால் மாட்டு சந்தை மாடுகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா பரவல் குறைந்த பிறகு, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைக்கும் வரை, பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில், வாரம் இருமுறை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை செயல்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும், உள்ளூர் வியாபாரிகளும் சந்தைக்கு மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து அதிகப்படியாக கேரளாவுக்கு மாடுகள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மாடு வரத்து அதிகரிப்பால், விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் கோவை மாவட்டம் முழுவதும், கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி மாட்டு சந்தையை தற்காலிகமாக மூட கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதனால் மாட்டு சந்தை மாடுகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா பரவல் குறைந்த பிறகு, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைக்கும் வரை, பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.