பொள்ளாச்சி அருகே கோயிலின் பூட்டை உடைத்து 2 சவரன் நகை திருட்டு - மேலும் மூன்று கடைகளில் திருட முயன்ற கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

கோவை: பொள்ளாச்சி சேரன்நகர் கோயிலில் 2 சவரன் நகை திருட்டு போனதையடுத்து அடுத்த, மூன்று கடைகளிலும் திருட முயற்சி செய்யப்பட்டதால் மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி சேரன்நகர் கோயிலில் 2 சவரன் நகை திருட்டு போனதையடுத்து அடுத்த, மூன்று கடைகளிலும் திருட முயற்சி செய்யப்பட்டதால் மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி கோவை ரோடு சேரன்நகர் நுழைவாயிலில் உள்ள விநாயகர் கோயிலில், நேற்று தரிசனத்திற்கு சென்ற பொதுமக்கள், விநாயகர் கோவிலின் ஒரு பகுதியில் உள்ள அம்மன் சன்னிதானத்தில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அங்கிருந்த தங்க நகைகளும் காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து, பொதுமக்கள் மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், தகவலையடுத்து, அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கோவில் சன்னிதானம் மற்றும் கோயிலை ஒட்டியுள்ள அடுத்தடுத்து 3 கடைகளில் நேற்று முன்தினம் இரவு திருட்டு முயற்சி நடைபெற்றது தெரியவந்தது.



மேலும், கோயிலில் உள்ள அம்மன் சன்னிதானத்தில் இருந்து 2 சவரன் நகைகள் திருட்டு போனதும், கடைகளின் ஷட்டர்கள் உடைக்க முடியாததால் கடைகளில் திருட்டு நடைபெறவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மகாலிங்கபுரம் போலீசார், தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...