கோவை: கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
கோவை: கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொற்றா நோய்களான ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவற்றுக்குத் தினசரி மாத்திரை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் இன்று துவக்கப்பட்டுள்ளது.

இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக் கட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, கோவை நஞ்சுண்டா புரத்தில், வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இதில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக மாவட்ட தொற்றா நோயாளிகளின் கண்காணிப்பு அலுவலா் கே.விஜயகுமார் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 75 ஆயிரம் போ் அரசு மருத்துவமனைகள் மூலம் சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு மாதாந்திர மருந்துகள் பெற்று வருகின்றனர். தற்போது, கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று மருந்துகள் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
இவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு எளிதில் தொற்றிக்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு மாதாந்திர மருந்துகள் பெறுபவர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்குவதற்காக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 50 ஆயிரம் நோயாளிகள் பயன்பெறுவர். இத்திட்டம் கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கும் திட்டத்துக்கான வாகனங்களை முதல்வா் தொடங்கிவைக்கிறாா்.
மாநகராட்சியில் நஞ்சுண்டா புரம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்திலிருந்தும், ஊரகப் பகுதியில் ஆனைமலை வட்டாரம், ஆழியாறு நகர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திலிருந்தும் வாகனங்கள் இயங்கும்.
நோயாளிக்கு வழங்கும் மருந்துப் பெட்டியில் 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கொடுக்கப்படும். அதனுடன் எந்தெந்த மருந்துகளை எந்த வேளையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வழிகட்டி அட்டையும் வைக்கப்பட்டிருக்கும்.
இரண்டு மாதங்களுக்குப் பின் மருத்துவமனையில் பரிசோதனை செய்து மீண்டும் 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படும் என்றார்.
தமிழகத்தில் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொற்றா நோய்களான ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவற்றுக்குத் தினசரி மாத்திரை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் இன்று துவக்கப்பட்டுள்ளது.
இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக் கட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, கோவை நஞ்சுண்டா புரத்தில், வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இதில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக மாவட்ட தொற்றா நோயாளிகளின் கண்காணிப்பு அலுவலா் கே.விஜயகுமார் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 75 ஆயிரம் போ் அரசு மருத்துவமனைகள் மூலம் சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு மாதாந்திர மருந்துகள் பெற்று வருகின்றனர். தற்போது, கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று மருந்துகள் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
இவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு எளிதில் தொற்றிக்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு மாதாந்திர மருந்துகள் பெறுபவர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்குவதற்காக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 50 ஆயிரம் நோயாளிகள் பயன்பெறுவர். இத்திட்டம் கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கும் திட்டத்துக்கான வாகனங்களை முதல்வா் தொடங்கிவைக்கிறாா்.
மாநகராட்சியில் நஞ்சுண்டா புரம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்திலிருந்தும், ஊரகப் பகுதியில் ஆனைமலை வட்டாரம், ஆழியாறு நகர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திலிருந்தும் வாகனங்கள் இயங்கும்.
நோயாளிக்கு வழங்கும் மருந்துப் பெட்டியில் 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கொடுக்கப்படும். அதனுடன் எந்தெந்த மருந்துகளை எந்த வேளையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வழிகட்டி அட்டையும் வைக்கப்பட்டிருக்கும்.
இரண்டு மாதங்களுக்குப் பின் மருத்துவமனையில் பரிசோதனை செய்து மீண்டும் 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படும் என்றார்.