கோவை: கிணத்துக்கடவில் புதருக்குள் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு, 49 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை: கிணத்துக்கடவில் புதருக்குள் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு, 49 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நேற்றிரவு கிணத்துக்கடவு காவல்துறை டாஸ்மாக் மதுபான கடை அருகே சென்று கண்காணித்த போது அங்கு புதருக்குள் வைத்து ஒரு நபர் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து, காவல்துறை அந்த வாலிபரைப் பிடித்து விசாரித்தபோது அந்த வாலிபர் கார்த்தி வயது (40) என்பதும் இவர் கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரைக் கைது செய்து அவரிடம் இருந்து 49 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நேற்றிரவு கிணத்துக்கடவு காவல்துறை டாஸ்மாக் மதுபான கடை அருகே சென்று கண்காணித்த போது அங்கு புதருக்குள் வைத்து ஒரு நபர் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து, காவல்துறை அந்த வாலிபரைப் பிடித்து விசாரித்தபோது அந்த வாலிபர் கார்த்தி வயது (40) என்பதும் இவர் கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரைக் கைது செய்து அவரிடம் இருந்து 49 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.