'ஏர் இந்தியா' சார்பில், 'பாண்டட் டிரக்கிங் சர்வீஸ்' கோவை விமான நிலையத்தில் துவக்கம்!

கோவை: இந்தியாவில் முதல்முறையாக 'ஏர் இந்தியா' சார்பில், 'பாண்டட் டிரக்கிங் சர்வீஸ்' கோவை விமான நிலையத்தில் துவக்கப்பட்டுள்ளது.


கோவை: இந்தியாவில் முதல்முறையாக 'ஏர் இந்தியா' சார்பில், 'பாண்டட் டிரக்கிங் சர்வீஸ்' கோவை விமான நிலையத்தில் துவக்கப்பட்டுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 7-மாவட்ட மக்களுக்குப் பயனளித்து வருகிறது. ஏர்போர்ட் வளாகத்தில் அமைந்துள்ள ஏர் கார்கோ அலுவலகத்தில் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் பல்வேறு வகையான கார்கோ புக்கிங் செய்யப்பட்டு விமானங்களில் கொண்டு செல்லப்படுகின்றன.

கோவையிலிருந்து உள்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு விமானச் சேவை உள்ளது. ஆனால் சர்வதேச விமான போக்குவரத்து பிரிவில், இலங்கை, சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டுமே விமான சர்வீஸ் உள்ளது.

இதுபோன்று வெளிநாடுகளுக்கு அதிக சர்வீஸ் இல்லாத விமான நிலையங்களில் 'பாண்டட் டிரக்கிங் சர்வீஸ்' என்ற திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இதன்படி கோவையிலிருந்து பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு டிரக் வாகனங்கள் மூலம் ஏற்றுமதி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தற்போது இந்தியாவில் முதல்முறையாக 'ஏர் இந்தியா' நிறுவனம் சார்பில் கோவை 'ஏர் கார்கோ' வளாகத்தில் பிரத்தியேக 'பாண்டட் டிரக்கிங் சர்வீஸ்' அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏர் இந்தியா ஏரியா மார்க்கெட்டிங் மேலாளர் கிரிஜா கோவை ஏர் கார்கோ உதவி பொது மேலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த சர்வீஸ் துவக்கப்பட்ட காரணத்தால் கோவையில் இருந்து ஏற்றுமதி பொருட்கள் கொச்சின், பெங்களூரு, ஐதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு ட்ரக் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 'ஏர் இந்தியா' சார்பில் பல்வேறு வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும். 'ஏர் இந்தியா'வின் முயற்சி கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வரும் ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த பயன் தரும்.

கோவை விமான நிலையத்தில் ஏற்கனவே தனியார் நிறுவனம் சார்பில், பாண்டட் ட்ரக்கிங் சர்வீஸ் அமலில் உள்ள நிலையில், தற்போது முதல்முறையாக 'ஏர் இந்தியா' போன்ற விமான நிறுவனம் சார்பில் இந்த சர்வீஸ் இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் துவக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...