திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டுக்கு வீடு வெளிப்புற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டுக்கு வீடு வெளிப்புற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசுடன் கைகோர்க்கும் விதமாக பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டுக்கு வீடு வெளிப்புறத்தில் கிருமி நாசினி தெளிக்கும் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேவி ஆர் நகர் பகுதியில் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். தனியார் தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில் தெருவாரியாக வீடுகள், கடைகள், பஸ்ஸ்டாப் போன்றவற்றின் வெளிப்புற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் களப்பணியாளர்களுக்கு கொரோனா கவச உடை, தெளிப்பான்கள் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் அடுத்த 11 மாதங்களுக்குள் அனைத்து வீடுகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படும். அதற்கான பணிகளை தன்னார்வலர்கள் மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசுடன் கைகோர்க்கும் விதமாக பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டுக்கு வீடு வெளிப்புறத்தில் கிருமி நாசினி தெளிக்கும் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேவி ஆர் நகர் பகுதியில் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். தனியார் தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில் தெருவாரியாக வீடுகள், கடைகள், பஸ்ஸ்டாப் போன்றவற்றின் வெளிப்புற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் களப்பணியாளர்களுக்கு கொரோனா கவச உடை, தெளிப்பான்கள் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் அடுத்த 11 மாதங்களுக்குள் அனைத்து வீடுகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படும். அதற்கான பணிகளை தன்னார்வலர்கள் மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.