கோவை: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மாச்சேகவுண்டம்பாளையத்திற்கு அரசு பேருந்து சேவையை கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
கோவை: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மாச்சேகவுண்டம்பாளையத்திற்கு அரசு பேருந்து சேவையை கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மாச்சேகவுண்டம் பாளையத்திற்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் மூலம் பேருந்து சேவையை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், கோரிக்கையை பரிசீலித்த அரசு போக்குவரத்து கழகம், மாச்சேகவுண்டம் பாளையத்திற்கு பேருந்து சேவை தொடங்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி, இன்று காலை மாச்சேகவுண்டம் பாளையத்திலிருந்து காந்திபுரம் வரை அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு அரசு பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் மதுக்கரை மத்திய ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி, அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் மாச்சேகவுண்டம்பாளையம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மாச்சேகவுண்டம் பாளையத்திற்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் மூலம் பேருந்து சேவையை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், கோரிக்கையை பரிசீலித்த அரசு போக்குவரத்து கழகம், மாச்சேகவுண்டம் பாளையத்திற்கு பேருந்து சேவை தொடங்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, இன்று காலை மாச்சேகவுண்டம் பாளையத்திலிருந்து காந்திபுரம் வரை அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு அரசு பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் மதுக்கரை மத்திய ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி, அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் மாச்சேகவுண்டம்பாளையம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.