கோவை: இரவு நேரத் தள்ளுவண்டி உணவு வியாபாரத்திற்கு அனுமதி வேண்டி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: இரவு நேரத் தள்ளுவண்டி உணவு வியாபாரத்திற்கு அனுமதி வேண்டி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் சாலையோரங்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் தள்ளுவண்டியில் கடைகள்அமைத்து உணவு வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
இதில் தள்ளுவண்டிக் கடைகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளார்.

இதனால் இரவு நேரங்களில் தள்ளுவண்டிகளில் உணவு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு அளித்தனர்.
தள்ளுவண்டியில் உணவு கடைகளைப்பொருத்தவரை பொதுமக்கள் அதிகமாகக் கூட வாய்ப்பில்லை. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மூன்று மணி நேரம் மட்டுமே வியாபாரம் நடைபெறுகிறது.
குறைந்த வருமானத்தைக் கொண்டு வாழ்வாதாரத்தைப் பெற்றுவரும் நிலையில், தள்ளுவண்டிக் கடைகளுக்கு அனுமதி இல்லை என்பது வேதனை அளிப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தள்ளுவண்டிக் கடைகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் சாலையோரங்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் தள்ளுவண்டியில் கடைகள்அமைத்து உணவு வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
இதில் தள்ளுவண்டிக் கடைகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளார்.
இதனால் இரவு நேரங்களில் தள்ளுவண்டிகளில் உணவு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு அளித்தனர்.
தள்ளுவண்டியில் உணவு கடைகளைப்பொருத்தவரை பொதுமக்கள் அதிகமாகக் கூட வாய்ப்பில்லை. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மூன்று மணி நேரம் மட்டுமே வியாபாரம் நடைபெறுகிறது.
குறைந்த வருமானத்தைக் கொண்டு வாழ்வாதாரத்தைப் பெற்றுவரும் நிலையில், தள்ளுவண்டிக் கடைகளுக்கு அனுமதி இல்லை என்பது வேதனை அளிப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தள்ளுவண்டிக் கடைகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.