கோவை: பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஃபர்னிச்சர் கடை உரிமையாளர் விவேகானந்தசாமி, கிணத்துக்கடவில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார்.
கோவை: பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஃபர்னிச்சர் கடை உரிமையாளர் விவேகானந்தசாமி, கிணத்துக்கடவில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தசாமி(51), இவரது மனைவி ராஜேஸ்வரி பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகிறார். விவேகானந்தசாமி பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் ஃபர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், விவேகானந்தசாமி இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது, கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருக்கும் போது சாலையின் குறுக்கே வந்தவர் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். இதில், நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த விவேகானந்தசாமிக்கு தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை விவேகனந்தசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்து சென்ற கிணத்துக்கடவு காவல் துறையினர் விசாரணை நடத்தி விவேகானந்தசாமியின் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தசாமி(51), இவரது மனைவி ராஜேஸ்வரி பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகிறார். விவேகானந்தசாமி பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் ஃபர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், விவேகானந்தசாமி இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது, கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருக்கும் போது சாலையின் குறுக்கே வந்தவர் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். இதில், நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த விவேகானந்தசாமிக்கு தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை விவேகனந்தசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்து சென்ற கிணத்துக்கடவு காவல் துறையினர் விசாரணை நடத்தி விவேகானந்தசாமியின் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.