உடுமலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவின் சார்பாக நகராட்சி அலுவலக மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சித்த மருத்துவ முகாம்..!

கோவை: உடுமலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவின் சார்பாக நகராட்சி அலுவலக மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.


கோவை: உடுமலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவின் சார்பாக நகராட்சி அலுவலக மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வு வாரம் ஆகஸ்டு 1 ம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உடுமலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவின் சார்பாக உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு சித்த மருத்துவமுகாம் நடைபெற்றது.

முகாமில், நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உடல்நலம் பரிசோதனை செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் நோய் வன்மையை அதிகரிக்கும் நெல்லிக்காய் லேகியம், அமுக்கிரா மாத்திரை, நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆடாதோடை மணப்பாகு போன்ற மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், நகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

உடுமலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் இலட்சுமிபதிராஜ் தலைமையில், டாக்டர் ஶ்ரீபப்பி, டாக்டர் சாலை கார்த்திகேயன், டாக்டர் சவீதா பங்கேற்று சிகிச்சை வழங்கினர். முகாமில் ஆய்வாளர்கள் செல்வம், ராஜமோகன், மருந்தாளுநர் பெனிலா, கிருஷ்ணக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...