கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

கோவை: கோவை துடியலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யக் கோரி மேட்டுப்பாளையம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை துடியலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யக் கோரி மேட்டுப்பாளையம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை துடியலூர் ரயில்வே ஸ்டேசன் ரோடு பகுதிகளில் கஞ்சா போதையில் சில இளைஞர்கள் அட்டகாசம் செய்துவந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், அந்த இளைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. புகாரைத் தொடர்ந்து நேற்று 2 இளைஞர்களை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி விடுவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த இளைஞர்கள் புகார் அளித்த இளைஞர்களை இன்று வீட்டுக்கு சென்று தாக்கியதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.



சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கஞ்சாவால் இளைஞர்கள் சீரழிவதாக கூறி கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்யக்கோரி கோசங்களை எழுப்பினர்.

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டனர். இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...