வால்பாறை நகராட்சி சுகாதாரத் துறை மூலம் வீடு வீடாக கபசுர குடிநீர் பொடி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோவை: வால்பாறை நகராட்சி சுகாதாரத் துறை மூலம் வீடு வீடாக கபசுர குடிநீர் பொடி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வால்பாறை நகராட்சி பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் நகராட்சி சுகாதாரத் துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இதன் மற்றொரு நடவடிக்கையாக வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 21-வார்டு பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் பொடி பாக்கெட்டுகளை 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர்.

மேலும், வீடுகளில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்றவை இருக்கிறதா என்பதை விசாரித்து குறிப்பெடுத்து வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வால்பாறை நகராட்சி பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் நகராட்சி சுகாதாரத் துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இதன் மற்றொரு நடவடிக்கையாக வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 21-வார்டு பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் பொடி பாக்கெட்டுகளை 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர்.
மேலும், வீடுகளில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்றவை இருக்கிறதா என்பதை விசாரித்து குறிப்பெடுத்து வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.