கோவை: வால்பாறை நகரில் மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறை நகரில் மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகமாக உள்ளது. இங்குள்ள வால்பாறை வனச்சரகம் மற்றும் மானாம் பள்ளி வனச்சரகத்தில் வன விலங்குகளான கரடி சிறுத்தைப் புலி யானை போன்றவை ஏராளமாக உள்ளன.
இந்த வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறி உணவு தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரத் துவங்கியுள்ளன.
வால்பாறை நகரில் உள்ள வாழைத்தோட்டம் எம்ஜிஆர் நகர் அண்ணா நகர் நடுமலை சாலை கோஆபரேட்டிவ் காலனி மற்றும் காமராஜர் நகர் கக்கன் காலனி பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடி வருகின்றன.
தேயிலைத் தோட்டப் பகுதிகளில் கரடிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், வால்பாறை நகரில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இன்னிலையில், வால்பாறை நகரில் உள்ள காமராஜ் நகரில் குடியிருப்பு பகுதி அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைகள் குட்டிகளுடன் நடமாட்டத்தைக் கண்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வனத்துறையினர் பொதுமக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகமாக உள்ளது. இங்குள்ள வால்பாறை வனச்சரகம் மற்றும் மானாம் பள்ளி வனச்சரகத்தில் வன விலங்குகளான கரடி சிறுத்தைப் புலி யானை போன்றவை ஏராளமாக உள்ளன.
இந்த வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறி உணவு தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரத் துவங்கியுள்ளன.
வால்பாறை நகரில் உள்ள வாழைத்தோட்டம் எம்ஜிஆர் நகர் அண்ணா நகர் நடுமலை சாலை கோஆபரேட்டிவ் காலனி மற்றும் காமராஜர் நகர் கக்கன் காலனி பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடி வருகின்றன.
தேயிலைத் தோட்டப் பகுதிகளில் கரடிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், வால்பாறை நகரில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இன்னிலையில், வால்பாறை நகரில் உள்ள காமராஜ் நகரில் குடியிருப்பு பகுதி அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைகள் குட்டிகளுடன் நடமாட்டத்தைக் கண்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வனத்துறையினர் பொதுமக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.