உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

திருப்பூர்: உடுமலை திருமூர்த்தி அணை மூலம் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பி.ஏ.பி) மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு, பாசன வசதி பெறுகின்றன.


திருப்பூர்: உடுமலை திருமூர்த்தி அணை மூலம் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பி.ஏ.பி) மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு, பாசன வசதி பெறுகின்றன.

பி.ஏ.பி தொகுப்பு அணைகளிலில் இருந்து 49.3 கி.மீ., தூரம் அமைந்துள்ள காண்டூர் கால்வாய் மூலம் உடுமலை திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து, பிரதான கால்வாய் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நான்காம் மண்டல பாசனத்தில் உள்ள 94,068 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்வகையில், விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து, இன்று முதல் 135 நாட்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில், மொத்தம் 9,500 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

மேலும், பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான ஏழு குள பாசனத்தில் 2,786 ஏக்கர் பாசன வசதி பெறும்வகையில், மொத்தம் 700 மில்லியன் கன அடி தண்ணீர் தளி கால்வாய் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் இன்று முதல் வரும் 31.05.2022 வரை திறக்கப்பட உள்ளது.



நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பங்கேற்று அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தனர்.

இவ்விழாவில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் என்று பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...