கோவை: பொள்ளாச்சியில் வடமாநில பானிபூரி கடைக்காரருக்குக் கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: பொள்ளாச்சியில் வடமாநில பானிபூரி கடைக்காரருக்குக் கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரங்க சமுத்திரம் பகுதியில் வசிக்கும் கிஷோர் சௌராசியா(32) என்பவர் பத்தரகாளியம்மன் கோவில் வீதி ரயில்வே கேட் அருகே பானிபூரி கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு 8- மணி அளவில் பானிபூரி கடைக்குக் காளான் சாப்பிட ஆட்டோவில் வந்த பொள்ளாச்சி கோட்டூர் ரோடுபெரியார் காலனியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் காளான் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்ட காலனுக்கு காசு தராமல் சென்ற ஆட்டோ ஓட்டுநரிடம் பானிபூரி கடைக்காரர் பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தராமல் ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் தகாத வார்த்தையில் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, பானிபூரி கடை உரிமையாளர் கிஷோர் சௌராசியா கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாசை கைது செய்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரங்க சமுத்திரம் பகுதியில் வசிக்கும் கிஷோர் சௌராசியா(32) என்பவர் பத்தரகாளியம்மன் கோவில் வீதி ரயில்வே கேட் அருகே பானிபூரி கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு 8- மணி அளவில் பானிபூரி கடைக்குக் காளான் சாப்பிட ஆட்டோவில் வந்த பொள்ளாச்சி கோட்டூர் ரோடுபெரியார் காலனியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் காளான் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்ட காலனுக்கு காசு தராமல் சென்ற ஆட்டோ ஓட்டுநரிடம் பானிபூரி கடைக்காரர் பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தராமல் ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் தகாத வார்த்தையில் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, பானிபூரி கடை உரிமையாளர் கிஷோர் சௌராசியா கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாசை கைது செய்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.