வால்பாறையில் ஆடி18-ல் கொரோனா கட்டுப்பாடு... கோயிலில் குறைந்தளவு மக்கள் சாமி தரிசனம்..!

வால்பாறை: ஆண்டுதோறும் ஆடி பதினெட்டில் கோயில்களில் சாமி தரிசனம் வேண்டி பெருமளவில் குவியும் நிலையில், இந்தாண்டு கொரோனா பெருந்தொற்று மீண்டும் பரவும் அச்சத்தால் குறைந்த அளவு மக்களே சாமி தரிசனம் செய்தனர்.


வால்பாறை: ஆண்டுதோறும் ஆடி பதினெட்டில் கோயில்களில் சாமி தரிசனம் வேண்டி பெருமளவில் குவியும் நிலையில், இந்தாண்டு கொரோனா பெருந்தொற்று மீண்டும் பரவும் அச்சத்தால் குறைந்த அளவு மக்களே சாமி தரிசனம் செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ் மாதமான ஆடி 18 ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் வழிபாடு செய்வதும், மற்றும் புனித நீராடவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அந்தவகையில், கோயிலில் ஆடி 18 அன்று ஒவ்வோர் ஆண்டும் சாமி கும்பிடுவதும் பொதுமக்கள் திதி, தர்ப்பணம் செய்வதும், புதுமண தம்பதிகள் மாலைகளை மாற்றி ஆற்றில் விட்டு புதிய தாலியினை கட்டிக்கொள்ளும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடையால், கோயில் வளாகம் முழுவதும், ஆற்று பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.



இருப்பினும் வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மட்டும் குறைந்தளவு மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். கோயில் பணியாளர்கள் கோயிலுக்கு வரும் பொதுமக்களுக்கு கை கழுவும் திரவம் கொடுத்து முகக் கவசம் கண்டிப்பாக அணிய வலியுறுத்தினர். முகக் கவசம் அணியாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...