திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலை கழிவு பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள், கட்டடங்கள் என சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலை கழிவு பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள், கட்டடங்கள் என சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் பல்லடம் தாராபுராம் சாலை கள்ளிப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் வட மாநில மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த நூற்பாலையில் உள்ள குடோனில் விற்பனைக்காக இரண்டாம் தர கழிவு பஞ்சு மூட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இன்று வழக்கம் போல நூற்பாலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது குடோனில் இருந்து புகை வெளியேறியது. உடனடியாக அங்கு சென்ற பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டையில் தீ மளமளவென பரவியது.

இதனை அடுத்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் நூற்பாலையின் மீது லாரிகள் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரமாக போராடி தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் மற்றும் கட்டடங்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் பல்லடம் தாராபுராம் சாலை கள்ளிப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் வட மாநில மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த நூற்பாலையில் உள்ள குடோனில் விற்பனைக்காக இரண்டாம் தர கழிவு பஞ்சு மூட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இன்று வழக்கம் போல நூற்பாலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது குடோனில் இருந்து புகை வெளியேறியது. உடனடியாக அங்கு சென்ற பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டையில் தீ மளமளவென பரவியது.
இதனை அடுத்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் நூற்பாலையின் மீது லாரிகள் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரமாக போராடி தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் மற்றும் கட்டடங்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.