கோவை: திருப்பூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து ஒரு கிலோ 100 கிராம் அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து ஒரு கிலோ 100 கிராம் அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு உட்பட்ட கே.வி.ஆர். நகர் அருகில் உள்ள பூச்சகாடு பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, விமல் என்பவரது வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக விமல் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த முத்துமாரி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு உட்பட்ட கே.வி.ஆர். நகர் அருகில் உள்ள பூச்சகாடு பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, விமல் என்பவரது வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து உடனடியாக விமல் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த முத்துமாரி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.