திருப்பூர்: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மடத்துக்குளத்தில் 268 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருப்பூர்: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மடத்துக்குளத்தில் 268 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின் பொது மக்களிடம் குறை கேட்டு ஆயிரக்கணக்கான மனுக்களை பெற்றார். திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மடத்துக்குளத்தில் 268 பயனாளிகளுக்கு ரூ 32,27,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நலத்திட்ட உதவிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின் பொது மக்களிடம் குறை கேட்டு ஆயிரக்கணக்கான மனுக்களை பெற்றார். திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மடத்துக்குளத்தில் 268 பயனாளிகளுக்கு ரூ 32,27,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நலத்திட்ட உதவிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.