கோவை: வால்பாறை பகுதியில் சிறுத்தை கரடி நடமாட்டத்தால் குடியிருப்புக்கு அருகில் உள்ள முட்புதர்கள் அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறை பகுதியில் சிறுத்தை கரடி நடமாட்டத்தால் குடியிருப்புக்கு அருகில் உள்ள முட்புதர்கள் அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு தினங்களில் வெவ்வேறு இடங்களில் கரடி தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மற்ற ஒருவர் படுகாயத்துடன் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வால்பாறை பகுதியில் சுமார் 5 ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு மாலை நேரங்களில் சிறுத்தைகளும் கரடிகளும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. அதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குடியிருப்பு அருகில் உள்ள முட்புதரில் பதுங்கி இரவு நேரங்களில் நடமாடி வருவதால் வால்பாறை அருகே கரடி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை பொது மக்களிடம் ஏற்படுத்தி வந்த நிலையில், குடியிருப்புகள் அருகிலுள்ள முழு புதர்களை நகராட்சி துறையினர் அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஊருக்குள் வரும் சிறுத்தைகள் கரடிகளை ஊருக்குள் வராமல் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு தினங்களில் வெவ்வேறு இடங்களில் கரடி தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மற்ற ஒருவர் படுகாயத்துடன் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வால்பாறை பகுதியில் சுமார் 5 ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு மாலை நேரங்களில் சிறுத்தைகளும் கரடிகளும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. அதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குடியிருப்பு அருகில் உள்ள முட்புதரில் பதுங்கி இரவு நேரங்களில் நடமாடி வருவதால் வால்பாறை அருகே கரடி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை பொது மக்களிடம் ஏற்படுத்தி வந்த நிலையில், குடியிருப்புகள் அருகிலுள்ள முழு புதர்களை நகராட்சி துறையினர் அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஊருக்குள் வரும் சிறுத்தைகள் கரடிகளை ஊருக்குள் வராமல் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.