கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 100 குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 100 குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக, சுந்தராபுரம் காமராஜ் நகர் பகுதியிலும் 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் காய்கறி வழங்கப்பட்டது. கடந்த 20 நாட்களாக கொரோனாபாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் வலியுறுத்தலின்படி, கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சாலையோர மக்களுக்கு 'ஆதரவற்றோருக்கு உணவு உறுதி திட்டம்' மூலம் மதிய உணவு வழங்கப்பட்டதின் மூலம் இதுவரை 1200 ஆதரவற்ற மற்றும் உணவு தேவையுள்ள உறவுகள் பயன்பெற்றனர். அவர்களுக்கு தினந்தோறும் முக கவசம் மற்றும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது.

இதில் களப்பணி ஆற்றிய உணவு உறுதிதிட்ட பொறுப்பாளர்கள் அசோக்குமார் ராஜ்குமார் மற்றும் சாவடி பகுதி களப்பணியாளர்கள்: வரதராஜ், ரத்திணவேல், அன்பு, தினேஷ், ஆறுமுகம், அரவிந்த் உட்பட அனைத்து களப்பணி உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சுந்தராபுரம் காமராஜ் நகர் பகுதியிலும் 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் காய்கறி வழங்கப்பட்டது. கடந்த 20 நாட்களாக கொரோனாபாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் வலியுறுத்தலின்படி, கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சாலையோர மக்களுக்கு 'ஆதரவற்றோருக்கு உணவு உறுதி திட்டம்' மூலம் மதிய உணவு வழங்கப்பட்டதின் மூலம் இதுவரை 1200 ஆதரவற்ற மற்றும் உணவு தேவையுள்ள உறவுகள் பயன்பெற்றனர். அவர்களுக்கு தினந்தோறும் முக கவசம் மற்றும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது.
இதில் களப்பணி ஆற்றிய உணவு உறுதிதிட்ட பொறுப்பாளர்கள் அசோக்குமார் ராஜ்குமார் மற்றும் சாவடி பகுதி களப்பணியாளர்கள்: வரதராஜ், ரத்திணவேல், அன்பு, தினேஷ், ஆறுமுகம், அரவிந்த் உட்பட அனைத்து களப்பணி உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.