கிணத்துக்கடவு நாம் தமிழர் கட்சி சார்பில் 100 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி விநியோகம்!

கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 100 குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 100 குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.



முன்னதாக, சுந்தராபுரம் காமராஜ் நகர் பகுதியிலும் 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் காய்கறி வழங்கப்பட்டது. கடந்த 20 நாட்களாக கொரோனாபாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.



நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் வலியுறுத்தலின்படி, கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சாலையோர மக்களுக்கு 'ஆதரவற்றோருக்கு உணவு உறுதி திட்டம்' மூலம் மதிய உணவு வழங்கப்பட்டதின் மூலம் இதுவரை 1200 ஆதரவற்ற மற்றும் உணவு தேவையுள்ள உறவுகள் பயன்பெற்றனர். அவர்களுக்கு தினந்தோறும் முக கவசம் மற்றும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது.



இதில் களப்பணி ஆற்றிய உணவு உறுதிதிட்ட பொறுப்பாளர்கள் அசோக்குமார் ராஜ்குமார் மற்றும் சாவடி பகுதி களப்பணியாளர்கள்: வரதராஜ், ரத்திணவேல், அன்பு, தினேஷ், ஆறுமுகம், அரவிந்த் உட்பட அனைத்து களப்பணி உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...