கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் அகற்றம்..!

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் குறித்து சர்ச்சை எழுந்தநிலையில், தற்போது, அந்த சர்ச்சைக்குரிய திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டுள்ளது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் குறித்து சர்ச்சை எழுந்தநிலையில், தற்போது, அந்த சர்ச்சைக்குரிய திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டுள்ளது.

கோவை மருதமலை செல்லும் ரோட்டில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் நூலகமும் இயங்கி வருகின்றது. நூலகத்தில் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், நூலகத்தில் உள்ள திருவள்ளுவர் படம் காவி உடை அணிந்த நிலையில் காட்சியளிப்பதாக சர்ச்சை எழுந்து உள்ளது. இதற்கு கம்யூனிஸ்டு மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் உட்பட பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘இது மத சாயம் பூசும் நோக்கம் இந்த செயல் அங்குள்ள அதிகாரிகளால்தான் செயல்படுத்தபட்டிருக்கும். இதுகுறித்து நாங்கள் அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். எனவே, அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

இதற்கிடையே வேளாண் பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. ‘‘திருவள்ளுவர் சிலையானது புதியதாக வைக்கப்பட்டுள்ள சிலை அல்ல. அந்த சிலை 2015 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய அந்த திருவள்ளுவர் சிலையை அகற்ற அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எனவே, இந்தநிலையில் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்த ஒரு படம் அகற்றப்பட்டது'' என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...