திருப்பூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர் வினித் இன்று பொறுப்பேற்பு..! அதிக அளவில் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் ஏழாவது மாவட்ட ஆட்சியராக டாக்டர் வினித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் ஏழாவது மாவட்ட ஆட்சியராக டாக்டர் வினித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் 2009ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி துவங்கப்பட்டது. அப்போது தனி அலுவலராக இருந்த சமயமூர்த்தி திருப்பூரில் முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அடுத்ததாக மதிவாணன், கோவிந்தராஜ், ஜெயந்தி, பழனிச்சாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினர். கடந்த 2019 செப்டம்பர் 29ம் தேதி முதல் விஜய கார்த்திகேயன் திருப்பூரில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், மின்சார உற்பத்தி மற்றும் தொடர் அமைப்பு கழக இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் வினித் திருப்பூர் மாவட்டத்தின் ஏழாவது மாவட்ட ஆட்சியராக தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார். 38 வயது நிரம்பிய டாக்டர் வினித் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். கேரளா சிவில் சர்விஸ் அகாடமியில் பயிற்சி பெற்று IAS தேர்வில் இந்திய அளவில் 36வது ரேங் பெற்றுள்ளார்.(2013 பேட்ச்). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். அப்பொழுது இவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது தனியார் மருத்துவமனையை நாடாமல் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனிடையே, திருப்பூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர் வினித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட உள்ளதாக தெரிவித்தார். மேலும் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும், திருப்பூருக்கு அதிக தடுப்பூசி கிடைக்க முயற்சி மேற்கொள்வோம். பெறப்படும் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும். தற்போது திருப்பூரில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரிசோதனை அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...