நீலகிரி: நீலகிரியில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரியில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக, நீலகிரி மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. அவலாஞ்சியில், நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, 83 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அப்பர் பவானியில், மாவட்டத்தில் அதிகபட்சமாக 109 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. பலத்த காற்று வீசுவதால், குந்தா, புதுமந்து, குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் மின்கம்பம் மீது மரங்கள் சாய்ந்ததால், சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
இதனையடுத்து, சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் உடனுக்குடன் அகற்றினர். ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இது குறித்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''இரண்டு நாட்களாக மழை அதிகரித்துள்ளது. 42 மண்டல குழுக்கள், பேரிடர் பகுதிகளில் கண்காணிப்பில் உள்ளனர். தாழ்வான மற்றும் வெள்ள அபாய பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்கவைக்க 456 பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன,'' என்றார்.
கடந்த மூன்று நாட்களாக, நீலகிரி மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. அவலாஞ்சியில், நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, 83 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அப்பர் பவானியில், மாவட்டத்தில் அதிகபட்சமாக 109 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. பலத்த காற்று வீசுவதால், குந்தா, புதுமந்து, குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் மின்கம்பம் மீது மரங்கள் சாய்ந்ததால், சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
இதனையடுத்து, சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் உடனுக்குடன் அகற்றினர். ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இது குறித்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''இரண்டு நாட்களாக மழை அதிகரித்துள்ளது. 42 மண்டல குழுக்கள், பேரிடர் பகுதிகளில் கண்காணிப்பில் உள்ளனர். தாழ்வான மற்றும் வெள்ள அபாய பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்கவைக்க 456 பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன,'' என்றார்.