கொரனாவை கட்டுபடுத்துவதே முதன்மையான பணி என கோவை மாநகராட்சியின் புதிய ஆணையர் ராஜகோபால் சுங்கரா உறுதி!

கோவை: கொரனாவை கட்டுபடுத்துவதே தனது முதன்மையான பணி என கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.



கோவை: கொரனாவை கட்டுபடுத்துவதே தனது முதன்மையான பணி என கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டது. கோவை மாநகராட்சி ஆனையராக இருந்த குமாரவேல் பாண்டியன் வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யபட்டதுடன் புதிய கோவை மாநகராட்சியின் ஆணையராக ராஜகோபால் சுங்கரா நியமிக்கபட்டார்.



கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக ராஜகோபால் சுங்கராவ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியைத் தொடங்கினார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ராஜகோபால் சுங்கரா, “கோவை மாநகரில் தனது முதன்மை பணியாக கொரனாவை கட்டுப்படுத்துவதுதான்.

இரண்டாவதாக பொது மற்றும் வழங்கல், மூன்றவதாக மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன். இரண்டாம் அலை பரவல் இருக்கும் நிலையில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன்.

கோவை மாநகரில் அரசு அனுமதியில்லாமல் செயல்படும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை கண்காணிக்க ஏற்கனவே மண்டலங்கள் வாரியாக குழுக்கள் நியமிக்கபட்டுள்ளது.

அனுமதியில்லாமல் கடைகள் செயல்படுவது கண்டறியபட்டால் அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சென்னை மாநகராட்சியில் உள்ளது போல கொரனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமை படுத்தபட்டுள்ளவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்க அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தனிமைபடுத்தபட்ட பகுதிகள் ஆராயப்படும்,” என தெரிவித்தார்.



முன்னதாக முன்னாள் ஆனையராக இருந்த குமாரவேல் பாண்டியனை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...