உரிய விலை கிடைக்காததால் கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைவு; நஷ்டத்தில் விவசாயிகள்..!

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவாக நாட்டுத் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவாக நாட்டுத் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்தாண்டு நல்ல மழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்ததோடு கிணறுகளிலும் தண்ணீர் வற்றாமல் உள்ளது.

இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயிகள் நாட்டு தக்காளி அதிகளவில் சாகுபடி செய்ததால் விளைச்சல் அதிகமாக காணப்பட்டது.

அண்மைக்காலமாக, கிணத்துக்கடவு காய்கறி மார்க்கெட்டுக்கு அதிக அளவில் தக்காளி வரத்து இருந்து வந்தது. 15 கிலோ எடை கொண்ட நாட்டுத் தக்காளி 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை மட்டுமே ஏலம் போனது.



இதனால், ஆயிரக்கணக்கில் செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், தக்காளியை பறிக்காமல் செடியிலேயே, விவசாயிகள் விட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.



இன்றைய நிலவரப்படி, கிணத்துக்கடவு மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டுதக்காளி 7 ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...