திருப்பூருக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க இருப்பதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வரும் 6ம் தேதி அரசுத்துறை அலுவலர்கள் விவசாயிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளோடு ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவிருப்பதாக திருப்பூரில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வரும் 6ம் தேதி அரசுத்துறை அலுவலர்கள் விவசாயிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளோடு ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவிருப்பதாக திருப்பூரில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வருகின்ற 6ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.



இந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க இருப்பதாகவும், அதன் பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த வளர்ச்சித் திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதாக தெரிவித்தார்.

மேலும், அதன்பிறகு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மற்றும் விவசாயிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளோடு ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். இன்று நடந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...