பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் குறித்து நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஸ்ரீனிவாச பெருமாள், தற்போது அபுதாபியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கோவையில் இருந்தபோது, கடந்த 2025 செப்டம்பர் 28-ஆம் தேதி வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் மூலம் தொடர்புகொண்ட மர்மநபர்கள், பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்பவைத்து, பல்வேறு தவணைகளில் ரூ.27,45,800-ஐ பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பச் செய்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஏற்கனவே கோவை அறிவொளி நகரைச் சேர்ந்த வசந்த் (20), கோவைபுதூரைச் சேர்ந்த அஜல் (22), திருப்பூர் மாவட்டம் கொங்கணகிரியைச் சேர்ந்த ஜனகன் (23), பல்லடத்தைச் சேர்ந்த சிம்கார்டு விற்பனையாளர் பரத் (26) மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த உதயகுமார் (38) ஆகிய ஐந்து பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.



விசாரணையில், இவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் இணைந்து ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து பணம் பறித்தது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் பயன்படுத்திய வங்கிக் கணக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், வசந்த் தனது வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதும், அஜல் கமிஷன் ஏஜென்டாக செயல்பட்டதும், ஜனகன் வங்கிக் கணக்குகள் மற்றும் சிம்கார்டுகளை ஏற்பாடு செய்து கொடுக்கும் புரோக்கராக இருந்ததும், பரத் பொதுமக்களின் ஆதார் விவரங்களை தவறாக பயன்படுத்தி 250-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை குற்றச் செயல்களுக்காக வழங்கியதும், உதயகுமார் வெளிநாட்டு மோசடி கும்பல்களுக்கு இந்திய வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்து கொடுக்கும் முகவராக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உதயகுமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற கூட்டாளிகளை கைது செய்யவும், மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறியவும், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...